தமிழகம்

தினந்தோறும் கொலை பட்டியல்.. சட்டப்பேரவைக்கு வெளியே வெளுத்துவாங்கிய இபிஎஸ்!

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4 கொலைச் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதன் பின்பு, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச முயற்சித்தோம். ஆனால், சபாநாயகர் அப்பாவு என் கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மதுரை அருகே காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்துள்ளார். கிட்டத்தட்ட சினிமா பாணியில் நடந்த கொடூரம் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் திமுக நிர்வாகி குமார் கடத்திச் செல்லப்பட்டு கொலை என்று ஒவ்வொரு நாளும் கொலைப் பட்டியல் வெளியாகி வருகிறது.

திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல்தான். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு போலீசாரைக் கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஜாகீர் உசேன், தனது உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்தபோது, காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும்போது, முதலமைச்சர் அதனை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க: மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உங்களுடைய ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா, அப்படி நடக்கவில்லையா என்கிறார். அதெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள். கொலைகளை எண்ணிக்கை அடிப்படையிலா ஒப்பிட வேண்டும்? மக்களின் பாதுகாப்பில் விளையாடக்கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வதே அரசின் கடமை.

தங்கம், வெள்ளி விலை நிலவரத்தைப் போல் கொலை நிலவரம் வந்துவிடக் கூடாது. சட்டப்பேரவையில் இருந்து நாங்கள் பயந்துகொண்டு வெளிநடப்பு செய்யவில்லை. எங்களைப் பேசுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!

கடலூரில் கடந்த 2014ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில்…

18 minutes ago

4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!

ஆஸ்காருக்காக நான்காவது குழந்தை! விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

45 minutes ago

மகளின் தோழிகளைப் பார்க்க ஆசைப்பட்ட தந்தை.. டாக்ஸி டிரைவர் சிறை சென்ற பகீர் பின்னணி!

கேரளாவில், தனது வளர்ப்பு மகளின் தோழிகளையும் பாலியல் அத்துமீறலுக்கு அழைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம்,…

57 minutes ago

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத.. கூட்டணி கணக்கு? இபிஎஸ் கடும் விமர்சனம்!

எங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் திமுகவுடனும், திமுகவுடன் இருப்பவர்கள் எங்களுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: தமிழக…

2 hours ago

நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!

சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரகாஷ்ராஜ்.! தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா,சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள்…

3 hours ago

ஸ்டேட்டஸ் அரிப்புக்காக ரூ.100 கோடியில் வீடு.. நயன்தாராவின் பணத் திமிர் : பிரபலம் கொந்தளிப்பு!

நயன்தாரா ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியது குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா கடுமையா விமர்சித்துள்ளார். இது குறித்து…

3 hours ago

This website uses cookies.