தமிழகம்

இன்னும் 13 அமாவாசைகள் தான்.. திமுகவுக்கு கெடு விதித்த எடப்பாடி பழனிசாமி!

இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனையடுத்து, அவர் மேடையில் பேசுகையில், “தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளுப் பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது.

எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை ஜெயலலிதா நிறைவேற்றினார். இந்த இருபெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை, அவர்களுக்கு நாம் தான் வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம், நம்முடைய தலைவர்கள் தான். தொண்டர்கள் நிறைந்த கட்சி தான் அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை, திமுகவில் வாரிசு உள்ளது. அதனை ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும், உடைக்கவும் பலர் முயற்சி செய்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வப் பிறவிகள் உருவாக்கிய கட்சி. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும், அது நிலைக்காது, சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது.

யாரும் அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கின்றனர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அதனை முறியடிக்க வேண்டும். 2026ஆம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் உள்ளது. இந்த ஆட்சியில், நான்கு ஆண்டு காலம் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்தார்? தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் அவர் செய்த சாதனை.

இதையும் படிங்க: விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!

போட்டோஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு. ஒரு குழு அமைப்பார், இந்த அரசு ஒரு குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை. ரேஷன் கடையில் தற்போது பொருட்கள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கின்றனர்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் ஒரு செயலற்ற முதலமைச்சர். அவர் பொம்மை முதலமைச்சராக உள்ளார்” எனப் பேசினார்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

1 hour ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

2 hours ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

3 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

5 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

5 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

5 hours ago

This website uses cookies.