Categories: தமிழகம்

கருத்து சொன்னால் எதிர் கருத்து சொல்லணும்.. உள்ள தூக்கி போடுவதா? யூடியூபர் மாரிதாசுக்காக வாய்ஸ் கொடுத்த சீமான்!!

திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் ஆஜராகினர்.

2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர்.

வைகோ மற்றும் சீமானை வரவேற்பதற்காக இரு கட்சியினரும் அங்கு திரண்டிருந்தனர்.
வைகோ மற்றும் சீமான் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று சென்ற பின்னர் திடீரென
கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் , இருவரும் ஒருவருக்கு ஒருவர் கொடி கம்புகளால் தாக்கி கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 2ல் ஆஜரானார். இதே வழக்கில் மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கு தொடர்பாக மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை – அண்ணன் வைகோவிற்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

ராஜிவ் காந்தி குறித்து கருத்து கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமானை எதிர்த்து திருச்சியில் நடந்த போராட்டம் குறித்த கேள்விக்கு ? அப்படியாவது காங்கிரஸ் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறது என்பதில் மகிழ்ச்சி.

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறும் நீங்கள் உங்கள் தொலைக்காட்சியில் அரைமணி நேரம் என்னை பேச விடுங்கள். சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது – இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா ? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது.

வாதம் பிரதி வாதம் செய்து தான் எதையும் உருவாக்க முடியும், யூடியூபர்கள் மாரிதாஸ்,சங்கர் என பலர்கள் கருத்துக் கூறினால் எதிர் கருத்து தான் கூறவேண்டும் தூக்கி உள்ளே வைக்க கூடாது.

பேரறிவாளன் விடுதலை நாங்கள் எந்த வகையில் கொண்டாடவில்லை, கொண்டாட வேண்டுமென்றால் என் தம்பி விடுதலைக்கு நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும்.

பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கூறும் அண்ணாமலை மோடி மற்றும் அமித்ஷா குஜராத்தில் நடைபெற்ற கலவரம் என்னவென்றே தெரியாமல் போனதா ? என்பதை கூற வேண்டும்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை உருவாக்கியவர் கருணாநிதி. இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

Q Branch என்கிற சித்திரவதை சிறையை உடனடியாக மூடுங்கள் – இலங்கை தமிழகர்களில். அம்மாவை தனியாக, அப்பாவை தனியாக குழந்தையை தனியாக முகாம்களில் அடைக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறுவது உங்களுக்கு நாடகமாக இல்லையா என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

15 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.