கோவையில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமியர்களின் பக்ரீத் தியாக திருநாள் கொண்டாடபடுகிறது.
இந்நிலையில் கோவை ஜிஎம் நகர் பகுதிவாழ் மக்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனவும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் தொழுகையில் இனிப்புகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
வுமன்ஸ் இந்தியா மூமென்ட்ஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் 84 வது வார்டு கவுன்சிலர் ஆலிமா ராஜா உசேன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சாஜிதா காமிலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.