கோவை: கட்டுமான பணியின்போது பொருட்கள் சரிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (77). இவர் தனது குடும்பத்தினருடன் கோவை பீளமேடு ராமானுஜம் நகரில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று சின்னக்கண்ணு வெள்ளலூர் ரோடு கனகசபாபதி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானம் சரிந்து சின்னக்கண்ணு தலை மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைபலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகாரின் பேரில், போத்தனூர் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் ராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.