கோவை: அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல்துறை ஆணையாளர் பிரதீப்குமார் , மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்படும். இதனையொட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பு அறைகளை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் காவல்துறை ஆணையாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
மேலும் பாதுகாப்பு அறைகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வற்றையும் ஆய்வு செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகளும் நகராட்சி பகுதி 390 வாக்குச் சாவடிகளும் பேரூராட்சி பகுதியில் 632 வாக்குச் சாவடிகளும் மொத்தம் 2312 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.