தலைநகரில் சிக்கிய ஹவாலா பணம்… தேர்தல் விதி அமலான முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது!!
சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைப்பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று இரவு பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கட்பட்ட தனிப்படை போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது, ஆவணங்கள் இன்றி ரூ.1.42 கோடி பணத்தை வைத்திருந்த யாசர் அராபத், அதனை வாங்க வந்த குணா ஜெயின், மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். இப்பொழுது, இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் யானை கவுனி போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை யானைக்கவுனி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.