தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே… சென்னையில் இன்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்.!!
நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 11 ஆயிரத்து 369 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 63 ஆயிரத்து 751 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களும் என மொத்தம் 75 ஆயிரத்து 120 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையில் ’12டி’ படிவம் வழங்கப்பட்டது. வீடு விடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் படிவம் வழங்கப்பட்டு, பின்னர் நிரப்பிய படிவங்கள் பெறப்பட்டது.
அதில் 85 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆயிரத்து 175 பேரும், மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். விருப்பம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு உரிமையை வழங்கும் வகையில் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தபால் வாக்குபதிவானது இன்று (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இந்த பணிக்காக சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.