திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் இன்று காலை மின் வாரிய ஒப்பந்த ஊழியர் மருங்காபுரியை சேர்ந்த உறவினர்களான கலாமணி (42) மற்றும் மாணிக்கம் (37) ஆகியோர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலைமாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் உயிரிழந்தார்.
இந்த சமயத்தில் கீழிருந்து மேல் ஏறிக் கொண்டிருந்த மாணிக்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் உயிரிழந்து தொங்கிய நிலையில் இருந்த கலைமாமணியை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான இரண்டு பேரில் உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அடுத்த காட்சி கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.