குளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுவர் வழியாக துளையிட்டு வீடியோ பதிவு செய்த நபரின் செயலால் அப்பகுதியினர் அதிர்ந்து போயுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த முத்திப்பாளையம் அருகே காந்திஜி காலனியைச் சேர்ந்த அன்பரசு என்பவர் எலெக்ட்ரிசியனாக உள்ளார்.
இதையும் படியுங்க: மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்ததை குளியல் அறை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இதனை திடீரென அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது உறவினர்கள் அங்கு ஓடி வந்து குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அன்பரசுவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட 44 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அன்பரசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.