Categories: தமிழகம்

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம்,சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன்(55). இவர் இதே பகுதியில் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரினை இயக்கியபோது அது இயங்கவில்லை. உடனடியாக மின் மோட்டார் பழுதினை நீக்குவதற்காக எலக்ட்ரிஷன் கணேசனை அழைத்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது மின்மோட்டாருக்கு மின் சப்ளை வரவில்லை. உடனடியாக அருகிலிருந்த மின்கம்பத்தில் ஏறிய மின் இணைப்பு கொடுக்க முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அதே மின்கம்பத்தில் கணேசன் சடலமாக தொங்கினார்.

இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து எலக்ட்ரீசியன் கணேசன் உடலை பத்திரமாக கீழே இறக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் இறந்து கிடந்த கணேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த கணேசன் உடலை மீட்டனர். பின்னர் சிறுகனூர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , விசாரணை நடத்தி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

1 hour ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

2 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

3 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

3 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

4 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

5 hours ago

This website uses cookies.