புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணி நடந்து வந்தது. இதில் புதிய மின்மாற்றி பொருத்தும் பணியில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் செந்தில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் இருந்த போர்மேன் சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் நிறுத்தப்பட்டதாக கூறி செந்திலை பணி செய்ய வைத்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த செந்தில் குடும்பத்தார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும், உரிய நிவாரண நிதி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
மேலும், போர்மேன் சுப்பிரமணியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.