மதுரை: மேலூர் அருகே மின் இணைப்பு வழங்க விசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பண்டங்குடியில் உபமின் நிலையம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக தங்க முனியாண்டி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கொட்டாம்பட்டியை சேர்ந்த விவசாயி கோபால கிருஷ்ணன் தனது மனைவி பெயரில் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக பண்டங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்து உள்ளார். அதன்படி அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக உதவி செயற்பொறியாளர் முனியாண்டி விவசாயி கோபால கிருஷ்ணனிடம் ரூ. 5,500 லட்சம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனை படி உதவி செயற் பொறியாளர் தங்க முனியாண்டியிடம் இன்று காலை அவர் பணத்தை கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி செயற் பொறியாளர் முனியாண்டியை கையும், களவுமாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தங்க முனியாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.