கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே இருந்த மின்சாரம் தற்பொழுது 22½ மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மின்சக்தி @ 2047 விழாவில் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் தனியார் திருமண மண்டபத்தில் நாட்டின் 75 வது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @2047 மின்சாரப் பெருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலந்து கொண்டு பேசிய மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் மின்சாரத்துறையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
அதேபோல் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் பம்பு செட் மின் இணைப்புகளை வழங்கினார்.
மேலும் கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது 22 ½ மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த விழாவில் இந்தியாவின் மின் துறையின் முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக அதன் புரட்சிமிகு பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் ஆத்மநிர்பர் பாரத் சுயசார்பு கொண்ட பாரதம் என்ற நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு உணர்வை செயல்படுத்தும் சக்தியும், திறனும் கொண்டவர்களுக்கு சமர்ப்பிக்கும் விழாவாகவும் கடந்த 8 ஆண்டுகளில் மின்சார துறையின் சாதனைகளை கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மின்சாரத் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனை குறும்படம் போட்டு காட்டப்பட்டது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.