கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காளிதாஸ் (59). அப்பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை காளிதாஸ் சாடிவயல் சோதனைசாவடியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சர்க்கார் போர்த்தி பேருந்து நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை காளிதாஸை வழிமறித்து தாக்கியது.
இதில் அலறிய காளிதாஸின் சத்தம்கேட்டு சென்ற பொதுமக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவரை மீட்டு காருண்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற காருண்யா நகர் போலீசார் காளிதாஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதே பிரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.