கோவை குற்றாலம் அருகே ஒற்றை காட்டுயானை தாக்கி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் காளிதாஸ் (59). அப்பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை காளிதாஸ் சாடிவயல் சோதனைசாவடியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சர்க்கார் போர்த்தி பேருந்து நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை காளிதாஸை வழிமறித்து தாக்கியது.
இதில் அலறிய காளிதாஸின் சத்தம்கேட்டு சென்ற பொதுமக்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவரை மீட்டு காருண்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காளிதாஸ் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற காருண்யா நகர் போலீசார் காளிதாஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதே பிரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.