ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் குடல் புழு நோயால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட பாலப்படுகை கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டனர்,
இதையடுத்து தாளவாடி வனச்சரகர் சதீஷ்க்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு யானை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானை குடல் புழு நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கால்நடை மருத்துவர் சதாசிவம் தெரிவித்தார்.
வனப் பகுதிக்குள் சென்ற யானையை தனிக்குழு அமைத்து யானையின் நிலை குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.