கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், மருதமலை, பேரூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது.
இதனால் ஏற்படும் மனித – விலங்கு மோதலில் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.யானைகள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை, ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் 7 யானைகள் கொண்ட யானை கூட்டம் ராஜப்பன், வெங்கடாசலம் மற்றும் கருப்புசாமி ஆகியோர் விவசாய தோட்டத்திற்கு புகுந்து அங்கு 1 1/2 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி மற்றும் தென்னை மரங்களை சூறையாடி சென்று உள்ளது. இது குறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் இந்த விஷயத்தில் அரசு மற்றும் வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பதை அனைத்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வலியுறுத்தி வருகின்றனர் .
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
This website uses cookies.