கோவை: மருதமலையில் மூன்று மணி நேரம் முகாமிட்ட காட்டு யானை: பக்தர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி – வனப் பகுதிக்கு தீவிர முயற்சிக்குப் பிறகு விரட்டிய வனத்துறையினர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது. முருகனின் ஏழாவது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற திருக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையிலும் செல்ல முடியாமலும் ஒற்றை யானை மற்றும் கூட்டமாகவும் யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் படிக்கட்டு பாதையில் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை 3 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்று இருந்தது. இதனால், வாகனங்களில் செல்லும் பக்தர்களும், படிக்கட்டு பாதையில் செல்லும் பக்தர்களும் கீழே இருந்து மேலே செல்ல முடியாமலும், சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் பக்தர்களும் செல்ல முடியா படி சுமார் 3 மணி நேரம் அவதி அடைந்தனர்.
இது குறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்தது வனத் துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின்பு வனப் பகுதிக்குள் யானை விரட்டினர். பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினர் பக்தர்கள்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.