கோவை: மருதமலையில் மூன்று மணி நேரம் முகாமிட்ட காட்டு யானை: பக்தர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி – வனப் பகுதிக்கு தீவிர முயற்சிக்குப் பிறகு விரட்டிய வனத்துறையினர்.
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது. முருகனின் ஏழாவது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற திருக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையிலும் செல்ல முடியாமலும் ஒற்றை யானை மற்றும் கூட்டமாகவும் யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் படிக்கட்டு பாதையில் முகாமிட்ட ஒற்றைக் காட்டு யானை 3 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்று இருந்தது. இதனால், வாகனங்களில் செல்லும் பக்தர்களும், படிக்கட்டு பாதையில் செல்லும் பக்தர்களும் கீழே இருந்து மேலே செல்ல முடியாமலும், சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் பக்தர்களும் செல்ல முடியா படி சுமார் 3 மணி நேரம் அவதி அடைந்தனர்.
இது குறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்தது வனத் துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின்பு வனப் பகுதிக்குள் யானை விரட்டினர். பின்னர் நிம்மதி பெருமூச்சுடன் வீடு திரும்பினர் பக்தர்கள்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.