கோவை : நவக்கரையில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை பகுதியில் ரயில் பாதையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது.
யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார், இளந்திரையன் ஆகியோர் தலைமையில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இன்ஜினில் தண்டவாளத்தில் பயணித்த படி வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நவக்கரை பகுதியில் சிறிது நேரம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் ரயில் நிலையத்திலும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தொலைக்காட்சி மூலம் யானை வழிப்பாதை மற்றும் ரயில் பாதைகள் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழக கேரள வனத்துறை அதிகாரிகள், மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.