வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க இரண்டு குட்டி யானைகள் ஷவரில் குளித்து மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி யானைகளாகிய 8 வயது ரோகினி மற்றும் 6 வயது பிரகிருதி யானைகள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஷவர் பாத் செய்து மகிழ்கின்றன.
விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்க கோடைகால செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக யானைகளுக்காக AAZP குழுவால் ஒரு மண் குளமும் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சில மாவட்டங்களில் தற்போதே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிவிட்டது.
இதனால் மனிதர்களைப் போலவே வன விலங்குகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே கோடை வெப்பத்தை சமாளிக்கவும், விலங்குகளை நீர்சத்து இழக்காமல் காப்பாற்றவும் வனத்துறை சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக வண்டலூரில் உள்ள யானைகளுக்கு ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ள வீடியோவை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பினை அளித்து, பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.