வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க இரண்டு குட்டி யானைகள் ஷவரில் குளித்து மகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், “வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி யானைகளாகிய 8 வயது ரோகினி மற்றும் 6 வயது பிரகிருதி யானைகள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஷவர் பாத் செய்து மகிழ்கின்றன.
விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்க கோடைகால செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக யானைகளுக்காக AAZP குழுவால் ஒரு மண் குளமும் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சில மாவட்டங்களில் தற்போதே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிவிட்டது.
இதனால் மனிதர்களைப் போலவே வன விலங்குகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே கோடை வெப்பத்தை சமாளிக்கவும், விலங்குகளை நீர்சத்து இழக்காமல் காப்பாற்றவும் வனத்துறை சார்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக வண்டலூரில் உள்ள யானைகளுக்கு ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ள வீடியோவை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பினை அளித்து, பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.