விருதுநகர் : வத்திராயிருப்பு அருகே போதுமான பாதை வசதி இல்லாததால், ஒரு அடி மட்டுமே உள்ள இடத்தில் இறந்தவர்களின உடலை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக் கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வ.மீனாட்சிபுரம். இங்குள்ள பொது மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால், ஒரு அடி மட்டுமே உள்ள பாதையில் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் சூழ்நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு இந்த பொது மயானத்திற்கு 15 அடி பாதை வசதி இருந்தது என்றும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அந்த 15 அடி பாதையினை ஆக்கிரமித்து தற்போது ஒரு அடி மட்டுமே பாதை இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, பொது மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், மயானத்தில் உள்ள எரியூட்டும் கொட்டகை மிகவும் சேதம் அடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகிறது.
ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பாக சேதமடைந்து கிடக்கும் எரியூட்டும் கொட்டகையினை அகற்றிவிட்டு புதிதாக கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி உள்ள பொதுமக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.