தேனி : டெல்லியில் இருந்து இன்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு திரும்பிய ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆனது கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தேர்ந்தெடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றி செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தநிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஒ.பன்னீர்செல்வம் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது பாட்டில்கள் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எம்பி இரவீந்திரநாத் குமார் டெல்லியில் இருந்து திரும்பியவர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த பின் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூழ வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை முன்பு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு சென்றார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.