பணம் வாங்கி மிரட்டும் சுற்றுச்சூழல் பொறியாளர்… கிரஷர் மற்றும் குவாரி சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் மீது ஏராளமான புகார் குவிந்துள்ளது. இது சம்மந்தமாக KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் K.Chandraprakash அவர்கள் தனது நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் எம் சாண்ட் யூனிட் வாங்கிவிட்டு கிரஷர் இயக்குபவர்களிடம் பணம் வாங்கி மிரட்டுவதாகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கிரஷர் ஒரு கிலோ மீட்டர் தூரம் உரிமம் உள்ளவர்களிடம் மாதம் ரூ.3 லட்சம் பணம் கேட்பதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து ரூ.1 லட்சம் பணம் வாங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது.
தயவு செய்து யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு போய்விடுவார்கள், நாளைக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம்தான் சந்திக்க நேரிடும், யாரும் அரசு விதிகளை மீறி செயல்பட வேண்டாம் மீறினால் வாழ்வாதாரமே போய்விடும். பணம் கொடுத்து அந்த பணிகளை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.