அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னை சென்றிருந்த எதிர்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி இன்று கோவை திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை சிக்னலில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அதிமுக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் இதய தெய்வம் அம்மா மாளிகைக்கு நடந்து வந்த அவருக்கு தொண்டர்கள் பொன்னாடை அணிவித்தும், மலர் கொத்துகள் வழங்கியும் வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி ஜெயலலிதாவின் ஆசியுடன் கழக பொதுசெயலாளராக பொது குழு உறுப்பினர்களால், மக்களால் எதிர்பார்த்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக மக்களுக்கு எழுச்சி மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது என தெரிவித்தார்.
மீண்டும் அதிமுக வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என தெரிவித்த அவர் அதற்கு ஒற்றை தலைமை வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வு நிகழ்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கோவையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை எனவும் எடப்பாடியார் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த பொழுது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும் என தெரிவித்தார்.
மக்களாட்சி வரவேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என அனைவரும் முடிவு செய்துள்ளார்கள் என தெரிவித்தார். தற்பொழுது அதிமுக தலைமை நிலைய செயலாளராக எனக்கு பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எதிர்பார்த்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர் எடப்பாடியார் என்று கூறிய அவர் மீண்டும் அவர் முதலமைச்சராக வருவார் எனவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்கள்(அதிமுக எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள்) அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என தெரிவித்தார். தலைமைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை தலைமை கழகம் தான் முடிவு செய்யும் என பதில் அளித்தார்.
இதையடுத்து அவருக்கு தாமரை பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.