திட்டிய தாய்.. தலைக்கேறிய கஞ்சா போதையில் மகன் செய்த வெறிச்செயல் : வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சடலம்.. ஷாக் சம்பவம்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளர் கிராமத்தில் 21 இளைஞன் சேவாக் தனது தாயுடன் வசித்து வந்திக்கிறார்.
இவர் கடந்த சில நாட்களாக கஞ்சா போதைக்கு அடிமையாகியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் 2 தினங்களுக்கு முன்னர் இவருடைய தாய் கஸ்தூரி திடீரென காணாமல் போயுள்ளார்.
உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கஸ்தூரியை எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மகன் சேவாக்கிடம் விசாரித்தனர்.
சேவாக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். மட்டுமல்லாது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. வீட்டை திறந்து பார்த்தபோது சுவரில் பல்வேறு இடங்களில் ரத்த கறை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேவாக், தனது தாய் கஸ்தூரியை அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து வருவாய் துறையினரின் உதவியுடன் கஸ்தூரியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மகன் சேவாக் மீது கொலை, குற்றத்திற்கான தடயங்களை அழித்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
பெற்ற தாயையே கஞ்சா போதையில் 21 வயது மகன் அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாராயக்கடைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நெடும் போராட்டத்தை போல கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டி இருக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.