தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் தகராறு… தேர்தல் அலுவலர் – போலீஸ் இடையே வாக்குவாதம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.அரசு விடுமுறை தவிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 13ம் தேதியான இன்றும் மற்றும் கடைசி நாளான 17ம் தேதி மட்டுமே உள்ளது.

இதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிட போவதாக திமுக ,நாம் தமிழர் அறிவித நிலையில் திமுக தரப்பில் வேட்பாளர் சந்திரகுமார் நிறுத்தப்பட்டுள்ளார்.இதையடுத்து அதிமுக,பாஜக, தேமுதிக போன்ற பிற முக்கியமான அரசியல் கட்சிகள் போட்டியிட போவதில்லை அறிவித்தது.

இதனால் வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளான சேலத்தை சேர்ந்த ராஜசேகர், ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், முகமது கைபீர், மற்றும் சென்னை விருகம்பாககம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து,தருமபுரியை சேர்ந்த ஆணந்தன், ராமநாதபுரத்தை சேர்ந்த பானைமணி என 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் கோவை சேர்ந்த நூறு முகமது முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் 2வது முறையாக இன்றும் வேட்புமனு தாக்கல் இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடக் கூடியவர்கள் என ஒருவர் இருமுறை என 9பேர் 10வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: தூத்துக்குடியில் 20 ஏக்கர் நிலம்.. விருதுநகரில் 11 வீடுகள்.. முள் படுக்கை சாமியார் சிக்கியது எப்படி?

இதற்கு முன்னதாக தர்மலிங்கம் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில் காலதாமதமாகியதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காததால் போட்டியிட வேட்பாளர் தர்மலிங்கத்துடன் வந்த முத்துச்சாமி என்பவர் காவல்துறை அதிகாரி யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.,

3மணிக்கு முன்பே மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்த நிலையில் தற்போது அனுமதி மறுப்பது எப்படி எனவும் இதுவே வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக இருந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி அவரை சமாதானம் செய்து வெளியே அனுப்பினர்.அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வந்து வேட்புமனு செய்ய முடியுமால் போன தர்மலிங்கம் ,வேட்புமனு தாக்கல் செய்ய 2:15மணி க்கு வந்த நிலையில் 2:30மணிக்கு அறைக்குள் சென்று விட்டோம் சிறிய கட்சிகள் வரக்கூடாது என்ற நோக்கில் காலதாமதம் செய்யப்படுகிறது,

வரும் காலத்தில் சிறிய கட்சி வளர காவல்துறை தேர்தல் ஆணையம் உதவியாக இருக்க வேண்டும் கடைசி நாளான 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்…

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!

பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…

18 minutes ago

வாய்ப்பு தாறோம் வாங்க..கமல் பெயரில் மோசடி..எச்சரிக்கை விடுத்த நிறுவனம்.!

கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…

1 hour ago

உதயநிதிக்கு ஜால்ரா போடவா? கடுப்பான Ex அமைச்சர்.. மதுரையில் பரபரப்பு பேச்சு!

திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…

2 hours ago

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

2 hours ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

3 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

4 hours ago

This website uses cookies.