ஈரோடு : அதிமுகவினர் அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் களம் ஆனது ஈரோட்டில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் இன்று மாலையில் நடைபெறும் நிலையில், கிழக்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம் பகுதியில் உள்ள பிரகாஷ் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையினர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் பிரகாஷ் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்தியதாக தெரிய வந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அதிமுகவினர் வெளியேற்றினர். இதனால் அதிமுகவினருக்கும் தேர்தல் பறக்கும் படையினருக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவினரை வெளியேற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுகவினர், இந்த வார்டு பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக இருப்பதால் அதிமுகவினருக்கு கூட்டம் நடத்த அனுமதி கடிதம் எழுதிக் கொடுத்தும் தர மறுப்பதாக குற்றம் சாட்டினர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.