ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெரியவரும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது. வரும் 27 ம் தேதி தெரியவரும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யாரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் போகத்தான் வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா, கலைஞருக்கு பிறகு பல முனை போட்டியுள்ளது. தலைவர்களை காலம் உருவாக்கிய பிறகு இரு முனை போட்டி ஏற்படும். திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்தால், மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக திருந்த வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.
அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்பு அத்தைக்கு மீசை முளைக்கடும் பிறகு பார்க்கலாம், என தெரிவித்தார்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.