திண்டுக்கல் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஜாக்கரதையாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குள் இரை தேடி நடமாடுவது வழக்கம். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 9 மணி வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் வனச்சாலைகள் வாகனங்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் சிறுத்தை நடந்து செல்வதை பார்த்து வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சத்தில் பார்த்தனர். அதில், சிறுத்தை ரோட்டை சிறிது தூரம் நடந்து சென்று, பின்னர் வாகன வெளிச்சம் காரணமாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதனை காரில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.