நாதக உடன் போட்டி என்பது காலத்தின் கொடுமை என ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
ஈரோடு: பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு மஞ்சள் மாநகரமாக இருந்தது. ஆனால், தற்போது புற்றுநோய் மாநகரமாக மாறி, மக்கள் வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். நெசவாளர்களின் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம், திமுகவின் கொடுமையான ஆட்சி, அராஜக ஆட்சி தான். அதனை வேரோடுப் பிடுங்கி எறியாமல் எங்களுக்கு வேறு பணி இல்லை” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், “பொய்யும் புரட்டும் பேசிக்கொண்டு இருக்கின்றவர்கள், அரசியல் கட்சிகளிலேயே அந்தக் கட்சி ஒரு வியாதி. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. நவீன அரவியல் வளர்ச்சியில் நாடு எங்கேயோ சென்று கொண்டிருக்கையில், ‘கட்டைவண்டியில் போ’ எனச் சொல்பவரை தலைவராக வைத்துக் கொண்டு, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து, அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாகப் பார்க்கிறேன்.
இதையும் படிங்க: பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!
தனிப்பட்ட முறையில் இதைக் காலத்தின் கொடுமையாகத்தான் கருதுகிறேன்” எனக் கூறினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான அதிமுக, அதனுடன் உள்ள தேமுதிக மற்றும் பாஜக, பாமக மற்றும் விஜயின் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.