சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காய்கறி சந்தை பழுதடைந்ததால் புதிதாக காய்கறி சந்தை கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டிற்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும், உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி இன்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.