சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காய்கறி சந்தை பழுதடைந்ததால் புதிதாக காய்கறி சந்தை கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டிற்கு நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும், இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவும், உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி இன்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.