ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் இரண்டு மினி வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பிடிபட்டது.
குட்கா பான் பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இதுவரை பல கோடி மதிப்பிலான புகைநிலை பொருட்களை கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக கர்நாடக மாநில எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த மினி வேனில் தடைசெய்ய பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.