ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு காய்கறி மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கொண்டு வரப்பட்ட 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் இரண்டு மினி வேன்கள் பண்ணாரி சோதனை சாவடியில் பிடிபட்டது.
குட்கா பான் பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பான்பராக் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இதுவரை பல கோடி மதிப்பிலான புகைநிலை பொருட்களை கைப்பற்றி அழித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழக கர்நாடக மாநில எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த மினி வேனில் தடைசெய்ய பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 2000 கிலோ புகையிலை பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுனர்களிடம் சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.