ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே காரை வழிமறித்த காட்டு யானைகளிடம் இருந்து, காரில் வந்தவர்கள் தப்பியோடிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் முகாமிட்டு, தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறி வைத்து காத்து நிற்கின்றன. இதனால், அவ்வழியாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த நபர்களை, ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் காரை வழிமறித்து நின்றது.
இதனால் அச்சைமடைந்த காரின் உள்ளே இருந்த நபர்கள் காரின் கதவைத் திறந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதில் காரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண்மணி ஒருவரை, அவருடன் வந்த நபர், கையில் தூக்கியவாறு வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
பின்னர், காட்டு யானைகள் காரின் பின்புறம் தும்பிக்கையால் தாக்கியும், காலால் உதைத்தும், காரை சேதப்படுத்தி சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.