கோவை : 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
கோவை குறிச்சி சிட்கோ பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வில்சன். கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் ஆசிரியரான இவர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.
ஆசிரியர் துறையில் மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும்,13 சர்வதேச விருதுகள் மற்றும் அமைதிக்கான சர்வதேச தூதுவர் என பல்வேறு விருதுகளை பெற்றவர்.
இந்நிலையில் கல்வித்துறையில் 32 கால சேவையை பாராட்டி ஐ.கே.செவன் உலக சாதனை புத்தகம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளனர். இதற்கான விழா ஆவராம்பாளையம் கோ.இண்டியா அரங்கில் நடைபெற்றது.
இதில் 9 பட்டபடிப்புகளை படித்து கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் ராபர்ட் வில்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் ராபர்ட் வில்சன்,கல்வித்துறை மட்டுமின்றி சமூகத்தில் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, கல்வியறிவு இல்லாத ஏழை குடும்பத்தினருக்கு இலவச பட்டா கிடைக்க உதவி செய்வது, பல்வேறு துறைகளில் ஏழை மாணவ,மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பது என பல்வேறு சமூக பணிகளை செய்து வருவதாக கூறிய அவர், தமக்கு வழங்கிய இது போன்ற விருதுகள் தமது சமூக சேவை பணிகளை செய்ய மேலும் ஊக்கப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.