தமிழகம்

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் கீழ், தகுதியுள்ள 21 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்போர் ஆகியோர் விண்ணப்பிக்க முடியாது.

இதன்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர், மீண்டும் மேல்முறையீடு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அதிக வருமானம் போன்ற தகுதியில்லாத நபர்கள், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தகுதியுள்ள பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இதுவரை எனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி வந்தனர். இதனிடையே, எனது கணவர் இறந்துவிட்டார்.

இதையும் படிங்க: சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

ஆனால், தற்போது திடீரென மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டனர். ஆனால், காரணம் தெரியவில்லை. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். அதேநேரம், சென்னையில் இருந்தே சிலருக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ள கோட்டாட்சியர், மேல்முறையீடு செய்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

21 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

23 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

24 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.