Categories: தமிழகம்

ஓபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் கூட ஜெயிக்க மாட்டார்… அரசியல் பிரமுகர் கடும் தாக்கு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உழவாலயத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லமுத்து தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு,பொருளாளர் பாலசுப்பிரமணியம்,செயலாளர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி தலைவி ராஜரீகா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அனைத்து விவசாய பொருட்களுக்கும் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்த ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவது எனவும்,100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாட்களை விவசாய பணிகளுக்கும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆனைமலை நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தலைவர் முடிவு எடுக்கும் முழு அதிகாரம் வழங்குவது எனவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசுகையில் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை 20000 ரூபாயை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் எனவும் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் அதிமுக வேட்பாளருக்கே எங்களுடைய ஆதரவு எனவும் பன்னீர் செல்வத்திற்கு இரட்டை இலை சின்னம் கொடுத்தால் மட்டும் ஜெயிக்கவா போகிறார் எனவும், அனைத்து மாவட்ட செயலாளர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இருவரையும் இணைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறுவது அனைத்தும் அரசியல் நாடகம் எனவும் தெரிவித்துள்ளார்.
கலைஞருக்கு பேனா சிலையை கட்சிப் பணத்தில் வைத்தால் தவறில்லை,மக்கள் வரிப்பணத்தில் எழுதாத பேனாவை கடலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

5 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

7 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

7 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

8 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

9 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

9 hours ago

This website uses cookies.