பாஜக குறித்து அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பேச்சு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பலதலைமுறையினர் வணங்கபட்டுவந்த ஆஞ்சநேயருக்கு திருக்கோவிலில் புதிய கோவில் கட்டுமானப் பணி துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பொன். இராதாகிருஷ்ணன் கூறுகையில், அரசியல் கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டும். மாற்று கருத்து இல்லை. காலசூழலுக்கேற்ப தான் போட்டியிட வேண்டும். திமுகவும், அதிமுகவும் பல இடைதேர்தல்களில் போட்டியிடவில்லை. ஈரோடு இடைதேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க மாநில தலைவர் அண்ணாமலைக்கு முழு
அதிகாரம் வழங்கபட்டுள்ளது, என தெரிவித்தார்.
பாஜக பல்வேறு மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிகளை அழித்த வரலாறு நாட்டுக்கும் எங்களுக்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஏற்கனவே பொன்னையன் இது போன்ற கருத்துகளை கூறுய பொழுது, இது கட்சியினுடைய கருத்தல்ல என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது என்பனைநினைவு கூறுகிறேன்.
ஈரோடு தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெல்வார் என்று கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இதுவரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
யாராவது தோல்வி அடைவேன் என கூறுவார்களா..? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கூறுவதுண்டு. பாஜகவிற்கு ஊர் ஒன்றுபட்டால் தான் கொண்டாட்டம் என்பதை உணர்ந்து தான் பாஜக, அதிமுகவை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவை பாஜக பிளவுபடுத்த முயல்வதாக கூறபடுவதை பொறுத்தவரையில், திமுகவிலிருந்து அதிமுக உருவாவதற்கு பாஜகவா காரணம்.? பழைய சரித்திரத்தை கூறினால் திமுகவினர் அசிங்கப்பட்டு போவார்கள், என கூறினார்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
This website uses cookies.