கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய முன்னாள் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர், நீலிகோணாம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, கடந்த சில தினங்களாக திடீரென வந்த நபர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, வீதி மீறல் உள்ளதாக அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றுள்ளார்.
மேலும், ஒவ்வொரு கடையிலும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்துக் கடை உரிமையாளர்கள் கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் யாரும் அபராதம் விதிக்கவில்லை என கூறிய, அவர் மறுமுறை வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், மீண்டும் சவுரிபாளையம் தனியார் வணிக நிறுவனத்திற்கு வந்த சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளார்.
இதையடுத்து கடை உரிமையாளர் சொர்ணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரி அங்கு சென்று சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சிவக்குமாரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் மாநகராட்சியில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.
கொரோனா காலத்தில் அபராதம் விதிக்க மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ரசீதை வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐடி கார்டு, ரசீது புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், சிவக்குமார் மீது 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.