திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம் என தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல் மாநகரத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளரான நெல்லை முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் தெற்கு பகுதியிலான மேட்டுப்பட்டி, குள்ளனம்பட்டி, பாரதிபுரம் நாகல்நகர் அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் செல்லும்பொழுது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்துக்கள், நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.