திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம் என தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.
திண்டுக்கல் மாநகரத்தில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சச்சிதானந்தம் மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நெல்லை முபாரக் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளரான நெல்லை முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் தெற்கு பகுதியிலான மேட்டுப்பட்டி, குள்ளனம்பட்டி, பாரதிபுரம் நாகல்நகர் அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் செல்லும்பொழுது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்துக்கள், நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
This website uses cookies.