திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அரசினை கண்டித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும், பள்ளி பயிலும் மாணவர்கள் கைகளிலும் எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கும் வகையில், தற்போது தமிழகம் போதைப்பொருளால் சீரழிந்து வருகிறது எனவும் கூறினார்.
மேலும், போதைப் பொருளால் ஒன்றரை லட்சம் கோடி வரை திமுகவிற்கு லாபம் கிடைத்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதீக் முதலமைச்சர் குடும்பத்துடன் பழகி வந்துள்ளதாகவும், அனைவரிடமும் பழகிய ஒரு நபர் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கட்சி தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.