Categories: தமிழகம்

செந்தில் பாலாஜி மீது காட்டும் அக்கறையை மேகதாது விவகாரத்தில் காட்டாதது ஏன்..? ஆர்பி உதயகுமார் ஆவேசம்!!

மதுரை ; மழைக்கால கூட்டத் தொடரில் மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் குறித்து மௌன சாமியாராக இருக்கும் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்களா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும். இதில் 17 அமர்வுகள் இடம் பெற உள்ளது. அம்மாவின் ஆட்சி இருக்கும் பொழுது காவிரி உரிமைகளை மீட்டு எடுக்கப்பட்டது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை புரட்சித்தலைவி அம்மா மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார். அதனை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதன்மூலம், காவிரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. 

ஆனால், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்தாண்டுகால பதவி முடியும் காலம் வரப்போகிறது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி உரிமை பிரச்சினை பற்றி வாய் திறந்தது கிடையாது. முல்லை பெரியார் குறித்து வாய் திறக்கவில்லை, கச்சத்தீவு பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை, ஆனால் புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதனைத் தொடர்ந்து அரசின் சார்பிலும் வருவாய் துறையையும் இதில் இணைத்தார்.

தமிழக மக்களிடத்தில் வாக்குகளை பெற்று வெற்றியடைந்த திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த கூட்ட தொடரில் ஜீவாதார பிரச்சினை பற்றி பேசுவார்களா..? கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 20.6.2023 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு அதிர்ச்சியூட்டும் கடிதத்தை எழுதி உள்ளார். அதில், மேகதாது அணை கட்ட விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேகதாது பிரச்சனையில் தமிழகம் இரட்டை வேடம் போடுகிறது, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தமிழகம் சட்ட விரோதமாக செயல்படுத்தி வருகிறது. மேகதாது கட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

8 கோடி மக்கள் மீது பழிச்சுமையை கர்நாடக அரசு சுமத்தி உள்ளது. ஆனால், முதலமைச்சர் சிறுகண்டனம், கருத்து தெரிவித்தாமல் மௌனமாக இருப்பது மக்கள் மீது அக்கறை இல்லாத காட்டுகிறது. வாய் திறந்து பேச வேண்டும், கர்நாடக துணை முதலமைச்சர் பேசுவது வடிகட்டின சுத்த பச்சைப்பொய் என்று கருத்து சொல்ல வேண்டாமா..? செந்தில் பாலாஜிக்கு காட்டும் அக்கறையை, காவிரி உரிமை பிரச்சினையில் காட்ட முதலமைச்சர் நேரம் செலுத்தவில்லை.

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது 4.9.2018, 8.10.2018, 17.9.2018, 31.10.2018, 27.11.2018 போன்ற பல்வேறு காலகட்டங்களில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தினார். இதனை ஒப்புக்கொண்ட காவிரி ஆணைய தலைவர் தமிழக அரசு ஒப்புதல் பெறாமல் அணை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறிவிட்டார். தற்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அணையை கட்டுவோம் எனக் கூறுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தமிழக உரிமை விட்டுக் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. அணைக்கட்ட 9,000 கோடியை கர்நாடகா ஒதுக்கிவிட்டது. கர்நாடாகவில் உள்ள கருணாநிதி குடும்ப சொத்துக்கள் பாதிக்கும் என்பதால் திமுக வாய் பேசாமல் பேச மடந்தையாக உள்ளது என கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

2 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

3 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

5 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

5 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

6 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

7 hours ago

This website uses cookies.