தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதல்வர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றதேர்தல், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்யும் கூட்டம் தூத்துக்குடி தெற்கு பகுதி முத்தையாபுரத்தில் வார்டு வாரியாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி தெற்கு பகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில், அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், அவர் பேசியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றெடுக்க வேண்டும். மேலும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர அனைவரும் பாடுபட வேண்டும். எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.