Categories: தமிழகம்

பெட்ரோல், டீசல் குறைப்பு பற்றி திமுக வாயை திறக்கவே தகுதியில்லை : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம்!

பெட்ரோல், டீசல் குறைப்பு பற்றி திமுக வாயை திறக்கவே தகுதியில்லை : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சனம்!

பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகி உள்ள நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு எஸ் பி வேலுமணிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,கோவை பாராளுமன்ற தொகுதிக்கு ராமச்சந்திரன் அவர்களையும் பொள்ளாச்சி தொகுதிக்கு கார்த்திக் அப்புசாமியையும் நீலகிரி பாராளுமன்றத்திற்கு லோகேஷ் தமிழ்ச்செல்வனையும் அறிவித்துள்ளார்கள் 40 தொகுதிகளுக்கும் விலவங்கோடு இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் அண்ணா திமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைத்து உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக இந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக அண்ணா திமுகவில் வெற்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள் என்றும் கண்டிப்பாக வெற்றி உறுதி என்றும் தெரிவித்தார்.

களத்தில் உள்ள வெற்றி வேட்பாளர்கள் படித்தவர்கள், சிறப்பான வேட்பாளர்கள் மட்டுமல்லாது 31 ஆண்டுகள் ஆளுகின்ற கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ஆகியோர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை தந்து 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்து இன்று அத்திக்கடவு அவினாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி, கூட்டக் குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சாலைகள், அதிகமான கல்லூரிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்று பெருமிதம் கொண்டார்.

மிகப்பெரிய வளர்ச்சியை அண்ணா திமுக கொடுத்துள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு எந்த திட்டத்தையும் இங்கே கொண்டு வரவில்லை என்றும் கூறியதுடன் பொதுமக்கள் என்று தெளிவாக இருப்பதாகவும் அண்ணா திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தெளிவாக இருக்கும் சூழலில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமல்லாது திருப்பூர் ஈரோடு உட்பட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த வெற்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதாகவும் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி இருப்பதாகவும் ஆனால் கோவை மாவட்டத்திற்கு திட்டங்கள் தந்தது எல்லாம் அண்ணா திமுக என்றும் சுட்டிக்காட்டிய எஸ்.பி.வேலுமணி, பெட்ரோல் டீசலை பற்றி திமுக பேசக்கூடாது என்றும் எந்த வாக்குறுதியையும் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அண்ணா திமுக வாக்குறுதி தந்தால் கண்டிப்பாக நிறைவேற்றும் எனவும் 37 எம்பிக்கள் கடந்த 2014 இல் அம்மா தலைமையில் வெற்றி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாடாளுமன்றத்தையே 28 நாட்கள் முடக்கியதாகவும் 38 எம்பிக்கள் திமுகவில் இருந்தும் எதுவும் செய்யவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் உரிமையை மீட்க அண்ணா திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரிமையை மீட்டெடுப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.

எங்களுக்கு வெற்றி உறுதி எனவும் சொன்னதை செய்யக்கூடிய இயக்கம் அண்ணா திமுக அதே போல் சொன்னதை செய்யக்கூடிய எங்களுடைய தலைவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் எனவும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறாரே என்ற கேள்வியை தவிர்த்த எஸ் பி வேலுமணி அங்கிருந்து புறப்பட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

26 minutes ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

40 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

2 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

3 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.