பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் ராட்சச கிரேன் மூலமாக பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு விமர்சனம்!!
தொடர்ந்து பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது;- மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தை அதிமுக கொண்டு வந்துள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ளான திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசும்போது;- திமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித்தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, ED, IT உள்ளிட்டவைகளை கொண்டு ரெய்டு விடுவோம் என்று பாஜக மிரட்டியபோதும் எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
திமுக ஆட்சியில் மக்களின் அதிருப்தி, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட ஐந்து காரணங்களுக்காக மக்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அதிமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்ய முடிவு செய்து விட்டார்கள்.
பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும், தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை வெற்றி பெறச் செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள், என பேசினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.