எவ்வளவு தான் அவர்கள் ரீசார்ஜ் செய்தாலும், அவங்க அவுட் ஆஃப் ரிச்சுக்கு சென்று விடுவார்கள் என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மேலும் படிக்க: இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு… மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதம் விபரம் இதோ…!!
இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கருப்பையா திருச்சியில் உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, மாநகர மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- பொதுச் செயலாளர் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஒற்றை விரலால் வாக்காளர்கள் ஓங்கி அடித்துள்ளனர்.
வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டையில் வாக்களித்து விட்டு திருச்சி பகுதி முழுவதையும் சுற்றி பார்த்து வருகிறார். இரட்டை இலை வேட்பாளர் கருப்பையா இங்கே..? துரை வைகோ எங்கே. அவர் சென்னையில் வாக்களித்தார். அல்லது விருதுநகர் கலிங்கம்பட்டியில் வாக்களித்தார் என தொலைக்காட்சியும் பார்க்கவில்லை. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை உணர்ந்து தான், மண்ணை சார்ந்தவரை உங்களோடு இணைக்க கருப்பையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
எவ்வளவு தான் அவர்கள் ரீசார்ஜ் செய்தாலும், அவங்க அவுட் ஆப் ரிச்சுக்கு சென்று விடுவார்கள். தொடர்பு எல்லைக்குள் எப்போதும் இருக்கக்கூடிய கருப்பையா அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சர்ப்ரைஸ் கிப்ட், யாரும் எதிர்பாராத வெற்றி என்ற கிப்ட்டை நாங்கள் பொதுச் செயலாளருக்கு ஒப்படைப்போம்.
நீங்கள் T.R பாணியில் ரைமிங்கா பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு, எங்கள் செயல்பாடும் அப்படித்தான் வேகமாக என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.