ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கூண்டிற்குள் சிக்கிய சிறுத்தை தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஓசூர் அருகே செயல்படாத கல்குவாரி உள்ளது. இங்கு பதுங்கி இருந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் வளர்த்துவரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தாளவாடி வனத்துறையினர் கல்குவாரியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டுகள் வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனையடுத்து பிடிபட்ட சிறுத்தையை பவானிசாகர் வனச்கரத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
சிறுத்தை சிக்கியிருந்த கூண்டு மிகவும் சேதமடைந்திருந்ததால் மற்றொரு புதிய கூண்டிற்குள் மாற்றும் போது எதிர்பாராத விதமாக தீடீரென எழுந்த சிறுத்தை காட்டிற்குள் தப்பி ஓடியது.
இதைக் கண்ட சுற்றிலும் நின்றிருந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நான்கு புறமும் தெறித்து ஓடினர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உள்ளதால் வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை மயக்கம் அடைய வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தை தாக்கி விடும் என்பதால் ஒசூர் கிராம கல்குவாரி பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் இதே சேதமடைந்த கூண்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிக்கிய சிறுத்தை தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.