Categories: தமிழகம்

அமைச்சரை சுற்றி வளைத்த நிர்வாகிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் பேச முடியாமல் திணறிய செஞ்சி மஸ்தான்!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்ட திண்டிவனம் நகர செயலாளர்கள் கூட்டம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த திண்டிவனம் திமுக முன்னாள் நகர செயலாளர் கபிலன் தற்போது நகர செயலாளராக இருக்கும் ஆசிரியர் கண்ணனிடம் என்னை ஏன் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அழைக்கவில்லை திமுக உங்கள் வீட்டு கட்சியா என சரமாரியாக அமைச்சர் கண் முன்னே கேள்வி எழுப்பினார்.

இதனால் திமுக முன்னாள் நகர செயலாளர் கபிலனுக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ஆசிரியர் கண்ணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் அமைச்சர் கண் முன்னே திட்டிக் கொண்டனர். முன்னாள் நகர செயலாளர் கபிலன் வெளியேறியவுடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கழகம் முன்னோடிகளுக்கு பதவி தராமல் புதிதாக கட்சியில் வந்த சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலர் சீட்டும் பதவியும் வாரி வாரி வழங்கினார்கள்.

திண்டிவனம் மேம்பாலம் கீழ் புதுவை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை யாரோ ஒரு அண்ணாச்சிக்கு மட்டுமே கடையை வழங்கி உள்ளீர்கள் திமுகவினருக்கு யாருக்கும் வழங்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரைத் தொடர்ந்து நகரப் பொருளாளர் சின்ன ராஜேந்திரன் நான் 30 லட்சம் செலவு செய்து என் மனைவியை கவுன்சிலராக ஆகி உள்ளேன் எனக்கு இதுவரையில் நகராட்சி வேலை யாரும் தருவதில்லை. கட்சி சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ்களில் என் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பால்வளத் துறை இயக்குனர் பதவி கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆளுக்கு உங்களுக்கு வேண்டிய பட்ட நபர் என்பதற்காக பொறுப்பு வழங்கி உள்ளீர்கள் என கவுன்சிலர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பினர்.

திமுக கவுன்சிலர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல குற்றச்சாட்டுகள் அடுக்கிய நிலையில் அமைச்சரால் பதில் சொல்ல முடியாமல் செயல் வீரர்கள் கூட்டம் இத்துடன் முடிகிறது என பேசி தனது உரையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவு செய்தார்.

அமைச்சரை திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முன்னதாக சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சருக்கு பாதுகாப்புக்காக வந்த போலீசார் உள்ளே வந்தபோது திடீரென திமுகவினர் போலீசாரை மடக்கி நீங்கள் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை வெளியே அனுப்பியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.