விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் ஏறி நாட்டு வெடிகுண்டு வெடித்த நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து 6 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த தெற்கு கோட்டையூர் அரசு பள்ளி பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டிசென்றுள்ளார். அப்போது டிராக்டரின் சக்கரத்தில் சிக்கிய நாட்டு வெடிகுண்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
நல்வாய்ப்பாக பாலசுப்பிரமணியன் உட்பட யாரும் எந்தவித காயமும் இன்றி தப்பினர். தகவலறிந்து சென்ற மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதேஇடத்தில் அடுத்தடுத்து 6 நாட்டுவெடிகுண்டுகள் சிக்கின.
தொடர்ந்து அந்த இடத்தில் போலீசார் முகாமிட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பட்டி வனசரகத்தை ஒட்டியுள்ள பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.
தற்போது தரிசு நிலத்தில் மேலும் சில நாட்டு வெடிகுண்டுகள் அதேபகுதியில் கிடைத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.