Categories: தமிழகம்

ரெண்டாக பிரிந்த சேரன் எக்பிரஸ்.. ரயிலின் பெட்டிகள் இணைப்பு துண்டிப்பு: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு..!

திருவள்ளூர் அருகே சென்னை-கோவை சேரன் விரைவு ரயில் இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிப்பு ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் ரயில் பயணங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியதால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெருத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே நேற்று இரவு 11 மணிக்கு ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது இதில் S.7 மற்றும் S.8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறியுள்ளனர். மேலும் பயணிகள் அனைவரும் கூச்சலிடத் தொடங்கினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி உடைந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதனை உணர்ந்த விரைவு ரயிலின் ஓட்டுநர் மிக சாமர்த்தியமாக ரயிலை வேகத்தை குறைத்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் ரயிலை நிறுத்தியுள்ளார். எனினும் பலத்த சத்தம் கேட்டதால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிடத் தொடங்கினர்.
வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில், நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளின் இணைப்பு உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரயில் பயணிகள் திருவள்ளூர் ரயில்நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்த இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டது.

பின்னர் சென்னை-கோவை சேரன் விரைவு ரயிலின் இருபெட்டிகளிலும் பொருத்தப்பட்டு, விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பின்னர் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Poorni

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

9 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

11 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

12 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

12 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

12 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

14 hours ago

This website uses cookies.