ரூ.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்த ஆபிரகாம் தாஸ் என்பவர் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை போத்தனுரை சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவர் குனியமுத்தூரில் உள்ள அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளையை திருச்சியை சேர்ந்த ஆபிரகாம் தாஸ் (வயது 59) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போத்தனூர் மேட்டூர் பகுதியில் அறக்கட்டளைக்கு சொந்தமான 4.36 ஏக்கர் இடத்தை சார்- பதிவாளரின் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக சித்தரித்து அந்த இடத்தை அருள் என்பதற்கு பவர் போட்டு கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆபிரகாம் தாஸ் மற்றும் அருள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆபிரகாம் தாசை போலீசார் கைது செய்தனர். மேலும் 4.36 சென்ட் இடம் தற்போதைய மதிப்பு 25 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.