ரூ.25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி பத்திரம் தயாரித்த ஆபிரகாம் தாஸ் என்பவர் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவை போத்தனுரை சேர்ந்தவர் கமலேஸ்வரன். இவர் குனியமுத்தூரில் உள்ள அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளையை திருச்சியை சேர்ந்த ஆபிரகாம் தாஸ் (வயது 59) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் போத்தனூர் மேட்டூர் பகுதியில் அறக்கட்டளைக்கு சொந்தமான 4.36 ஏக்கர் இடத்தை சார்- பதிவாளரின் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக சித்தரித்து அந்த இடத்தை அருள் என்பதற்கு பவர் போட்டு கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆபிரகாம் தாஸ் மற்றும் அருள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆபிரகாம் தாசை போலீசார் கைது செய்தனர். மேலும் 4.36 சென்ட் இடம் தற்போதைய மதிப்பு 25 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.